என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எல்லைதாண்டி மீன் பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது
    X

    எல்லைதாண்டி மீன் பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது

    • இந்திய எல்லையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பாய்மர கப்பல் நின்று கொண்டிருந்தது.
    • மியான்மர் மீனவர்களிடம் இருந்து பாய்மர படகு பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கடல்பகுதியில் இந்திய கடற்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது இந்திய எல்லையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பாய்மர கப்பல் நின்று கொண்டிருந்தது. உடனே கடற்படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பாய்மர கப்பலை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அதில் 4 மீனவர்கள் இருந்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், மியான்மர் நாட்டை சேர்ந்த விம்சோ, ஹான் சோ, கிய் லூரின், லங்சன் ஏஜ் என்பதும், எல்லை தாண்டி இந்திய எல்லையில் மீன் பிடித்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து நாகை துறைமுகத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது 'இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னையில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட உள்ளனர். மேலும் பாய்மர படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×