என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மருத்துவமனையில் இருந்தபடியே காணொலி மூலமாக மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர்.
- மருத்துவமனையில் இருந்த படியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர்.
இருப்பினும், மருத்துவமனையில் இருந்த படியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்கேற்று இருந்த மக்களை காணொலி மூலமாக சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






