என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வறுமை ஒழிப்பை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன்- மு.க.ஸ்டாலின்
    X

    வறுமை ஒழிப்பை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன்- மு.க.ஸ்டாலின்

    • மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.
    • 50 ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றம் குறித்து பேசியிருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * வரலாற்றில் ஒரு சிலர் தான் பலகோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வகையில் வாழ்ந்துள்ளனர், எம்.எஸ்.சுவாமிநாதன் அத்தகையவர்.

    * மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * பலமுறை எம்.எஸ்.சுவாமிநாதனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    * நாட்டில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் வாடியபோது மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாக இருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * இந்திய பசுமை புரட்சியின் தந்தை என உலகமே அவரை அழைத்தாலும் நமக்கு அவர் உணவுத்துறையை பாதுகாத்தவர்.

    * தான் பெற்ற அறிவை மக்களின் பசி போக்க பயன்படுத்தியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * 50 ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றம் குறித்து பேசியிருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * எம்.எஸ்.சுவாமிநாதனின் கடமைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் வேளாண் மாணவர்கள், விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×