என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொட்ட துறைகள் அனைத்திலும் கோலோச்சியவர் கலைஞர் கருணாநிதி - மு.க.ஸ்டாலின் புகழாரம்
- வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்தவர் கலைஞர்.
- ஒரு தலைப்புக்குள் சுருக்கி விட முடியாதவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி.
சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்" இன்றும் மற்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி.
* வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்தவர் கலைஞர்.
* கலைஞர் இந்திய முகமாக மாறிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
* தொட்ட துறைகள் அனைத்திலும் கோலோச்சியவர் கலைஞர் கருணாநிதி.
* தனது வாழ்வையே தமிழ் சமூகத்தின் உயர்விற்காக ஒப்படைத்தவர் கலைஞர் கருணாநிதி.
* கலைஞரின் சட்டமன்ற உரைகள் சட்டமன்ற மாண்புக்கு இலக்கணம்.
* ஒரு தலைப்புக்குள் சுருக்கி விட முடியாதவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி.
* செங்கோலை யாரும் பறித்து விடலாம் ஆனால் எனது எழுதுகோலை யாரும் பறிக்க முடியாது என கூறினார் கலைஞர் கருணாநிதி.
* 5 முறை தமிழக முதலமைச்சர், 50 ஆண்டுகள் தமிழ் இயக்கத்தின் தலைவராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.
இவ்வாறு அவர் கூறினார்.






