என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

4 திட்டங்களால் மட்டுமே பயனாளிகளுக்கு மாதம் ரூ.4000 மிச்சமாகிறது - மு.க.ஸ்டாலின்
- வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் தான் திருவண்ணாமலை.
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1.30 கோடி மகளிர் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.631.48 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ. 63.74 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2.66 லட்சம் பயனாளிகளுக்க ரூ.1,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆர்வத்துடன் திரண்டிருக்கும் உங்களை பார்க்கும்போது புது எனர்ஜி வருகிறது.
* ஆன்மீகத்தில் ஒளிவீசி ஆன்மீக அன்பர்களை ஈர்க்கும் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம்.
* வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் தான் திருவண்ணாமலை.
* தி.மு.க.வுக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினரை கொடுத்த முதல் மாவட்டம் திருவண்ணாமலை.
* 2025-ம் ஆண்டு நிறைவடையும் தருணத்தில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
* விடியல் பயணம் 900 கோடி முறை மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர்.
* கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1.30 கோடி மகளிர் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர்.
* எங்கள் அண்ணன் கொடுக்கும் சீர் என பெண்கள் கூறும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.
* ஒவ்வொருவரையும் சென்று சேரும் வகையில் தி.மு.க.வின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* 4 திட்டத்தில் மட்டும் பயன்பெறும் பயனாளிகளுக்கு மாதம் ரூ.4000 மிச்சமாகிறது.
* நான்கரை ஆண்டுகளில் நாடு போற்றும் திட்டங்களை திராவிட மாடல் அரசு கொடுத்துள்ளது.
* ஒவ்வொரு திட்டத்தின் வெற்றிக் கதைகளையும் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது.
* மாதிரிப்பள்ளிகள் என்ற திட்டம் தான் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று.
* திருவண்ணாமலையில் 21,463 மாணவிகள் புதுமைப் பெண்களாய், 19,376 மாணவர்கள் தமிழ் புதல்வனாய் உள்ளனர்.
* புதுமைப் பெண்கள், தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
* திருவண்ணாமலையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச காலை உணவு வழங்கப்படுகிறது.
* சொல்ல சொல்ல பெருமை கொள்ளக்கூடிய வகையில் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
* திருவண்ணாமலை ஏந்தல் கிராமத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும்.
* செங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும்.
* வேளாண் சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் மடையூரில் ரூ.3.94 கோடியில் மையம் அமைக்கப்படும்.
* கலசபாக்கத்தில் உள்ள கோவில் ரூ.5 கோடியில் புனரமைக்கப்படும்.
* நிதி கொடுக்காமல் முடக்கினாலும் அதனை மீறியும் வளர்வதால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல்.
* தமிழ்நாட்டின் வளர்ச்சி பலரது கண்களை கூசச்செய்கிறது. அதனால் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது.
* திட்டங்களை அறிவித்து விட்டு நிறைவேற்றும் வரை யாரும் தூங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






