என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது: மு.க.ஸ்டாலின்
- தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள் என்றார் ஒன்றிய அமைச்சர் ஷோபா.
- தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் என்றார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
சென்னை:
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
2024-ல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் ஷோபா, "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்! என கூறினார்.
2025-ல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!" என தெரிவித்தார்.
இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது.
இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது.
நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும் என செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.
Next Story






