என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு மூடுவிழா - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
    X

    100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு மூடுவிழா - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    • தமிழ்நாட்டின் மீது வெறுப்பை பரப்பினால் வடமாநிலங்களில் ஓட்டு கிடைக்கும் என பா.ஜ.க. நம்புகிறது.
    • 100 நாள் வேலைத்திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பது திருவண்ணாமலை மக்களுக்கு நன்கு தெரியும்.

    திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.631.48 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ. 63.74 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2.66 லட்சம் பயனாளிகளுக்க ரூ.1,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பா.ஜ.க.வுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து சரணாகதி அடைந்து விட்டனர்.

    * தமிழ்நாட்டின் தனித்தன்மை குறித்து தெரிந்து கொண்டு வடமாநிலத்தவர்கள் நமக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

    * தமிழ்நாட்டின் மீது வெறுப்பை பரப்பினால் வடமாநிலங்களில் ஓட்டு கிடைக்கும் என பா.ஜ.க. நம்புகிறது.

    * ஜி.எஸ்.டி.யால் மாநிலத்திற்கு வரி உரிமையும் இல்லை. வருவாயும் இல்லை.

    * நான் தி.மு.க. ஆதரவாளன் இல்லை, ஆனால் 'நான் முதல்வன்' சிறந்த திட்டம் என பாராட்டுகிறார்கள்.

    * மாநில உரிமையை விட்டுக்கொடுக்காததால் சமூக வலைதளங்களில் பாராட்டு கிடைக்கிறது.

    * தமிழக அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கினாலும் நமக்கு ஆதரவாக வடமாநில இளைஞர்கள் வீடியோ பதிவிடுகிறார்கள்.

    * பா.ஜ.க. ஆதரவாளர்களே தற்போது மத்திய அரசை கழுவி ஊற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

    * 100 நாள் வேலைத்திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பது திருவண்ணாமலை மக்களுக்கு நன்கு தெரியும்.

    * சாதனை படைத்த 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு மூடுவிழா நடத்தி உள்ளது.

    * 10 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்த 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அழித்து விட்டனர்.

    * 100 நாள் வேலைத்திட்ட பிரச்சனையில் பா.ஜ.க.வுக்கு இ.பி.எஸ். ஆதரவாக உள்ளார்.

    * தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சி தலைவர் 100 நாள் வேலை திட்டம் அழிப்புக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×