என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உதயநிதியை துணை முதலமைச்சராக்கியது தான் தி.மு.க.வின் சாதனை- எடப்பாடி பழனிசாமி
- மக்களின் செல்வாக்கையும், கட்சியின் செல்வாக்கையும் திமுக இழந்துவிட்டது.
- திமுக என்ற கட்சி இன்று நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கிறது.
ராணிப்பேட்டையில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தை ஒரு குடும்பம் சுரண்டுவதை தடுத்து நிறுத்துவதற்கான தேர்தல் 2026ல் நடைபெறுகிறது.
மக்களின் செல்வாக்கையும், கட்சியின் செல்வாக்கையும் திமுக இழந்துவிட்டது.
திமுக என்ற கட்சி இன்று நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கிறது.
உதயநிதியை துணை முதலமைச்சராக்கியது தான் திமுக செய்த சாதனை.
திமுக ஆட்சியில் மக்கள் கனவில் தான் வீடு கட்ட முடியும். திமுக ஆட்சியில் விவசாயி, நெசவாளர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






