என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கிட்னி திருட்டு - சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையைத் தொடங்க சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
    X

    கிட்னி திருட்டு - சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையைத் தொடங்க சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்

    • விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.
    • கிட்னி முறைகேடு நடந்துள்ளதை விசாரணை குழு உறுதி செய்துள்ளது.

    சட்டசபையில் கிட்னி திருட்டு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.

    * ஏழை மக்களின் கிட்னியை திருடிய மருத்துவமனை மீது தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    * அரசின் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் பாதிக்கப்பட்டோரை விசாரித்துள்ளனர்.

    * கிட்னி முறைகேடு நடந்துள்ளதை விசாரணை குழு உறுதி செய்துள்ளது.

    * உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    * சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையை தொடங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×