என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க. கூட்ட நெரிசலில் சேகரிக்கப்பட்ட 450 கிலோ காலணிகளுக்கு பாதுகாப்பு
    X

    த.வெ.க. கூட்ட நெரிசலில் சேகரிக்கப்பட்ட 450 கிலோ காலணிகளுக்கு பாதுகாப்பு

    • நேற்று அந்த காலணிகள் 2-ம் கட்டமாக அப்புறப்படுத்தப்பட்டன.
    • அடுத்த கட்ட விசாரணைக்கு தேவைப்படும் என்பதால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பதட்டத்தில் கூட்டத்துக்கு வந்திருந்த பலரும் தங்கள் காலணிகள் மற்றும் உடமைகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதனால், காலணிகள் சாலையில் நாலாபுறமும் சிதறி கிடந்தன. பின்னர், தூய்மை பணியாளர்கள் மூலமாக அந்த காலணிகள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டது. இதனை, ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் பார்வையிட்டார். அதன் பின்னர் கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். அதன் பின்னர் சிறப்பு புலனாய்வு குழு ஐஜி அஸ்ராகர்க் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து, நேற்று அந்த காலணிகள் 2-ம் கட்டமாக அப்புறப்படுத்தப்பட்டன. அந்த காலணிகளை கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு, குப்பை சேகரிக்கும் வாகனத்தில் ஏற்றி பாலம்மாள் புரத்தில் உள்ள குப்பை சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நேற்று சேகரித்த காலணிகளின் எடை சுமார் 450 கிலோ இருக்கும் என்றும், அது அடுத்த கட்ட விசாரணைக்கு தேவைப்படும் என்பதால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×