என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அனைத்துக் கட்சியினருக்கும் வேண்டுகோள் வைத்த ராமதாஸ்
- பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவர் பதவியை தமிழ்குமரனுக்கு வழங்கியுள்ளேன்.
- கரூர் துயர சம்பவத்தில் முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்துள்ளார்.
திண்டிவனம்:
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவர் பதவியை தமிழ்குமரனுக்கு வழங்கியுள்ளேன். அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்துவோம்.
* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை சொல்லி உள்ளேன்.
* கரூர் கூட்ட நெரிசல் போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் அரசியல் கட்சிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு உயிர் கூட பலியாகக்கூடாது. அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு காவல்துறை வழிகாட்ட வேண்டும்.
* கரூர் துயர சம்பவத்தில் முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்துள்ளார் என்றார்.
இதனிடையே, கரூர் விவகாரத்தில் விஜய் வீடியோ வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு, முதலமைச்சர் எப்படி காரணமாக முடியும்? என்றார்.






