என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாற்ற முடியும்? - தி.மு.க. அரசு தூக்கி எறியப்படும்: ஜெயக்குமார்
    X

    இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாற்ற முடியும்? - தி.மு.க. அரசு தூக்கி எறியப்படும்: ஜெயக்குமார்

    • தமிழகத்தில் கஞ்சா புழக்கம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொய் சொல்கிறார்.
    • மக்கள் பிரச்சனைகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சர் போட்டோஷூட் நடத்திக்கொண்டிருக்கிறார்.

    சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் கஞ்சா புழக்கம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொய் சொல்கிறார்.

    * முழு பூசணி என்று சொல்ல மாட்டேன், முழு பாறாங்கல்லை சோற்றில் மறைக்கிறது தி.மு.க.

    * இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாற்ற முடியும்?, தி.மு.க. அரசு தூக்கி எறியப்படும்.

    * கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தபோது செல்லாத முதலமைச்சர் தேர்தல் நேரத்தின்போது செல்கிறார்.

    * மக்கள் பிரச்சனைகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சர் போட்டோஷூட் நடத்திக்கொண்டிருக்கிறார்.

    * திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

    Next Story
    ×