என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாற்ற முடியும்? - தி.மு.க. அரசு தூக்கி எறியப்படும்: ஜெயக்குமார்
- தமிழகத்தில் கஞ்சா புழக்கம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொய் சொல்கிறார்.
- மக்கள் பிரச்சனைகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சர் போட்டோஷூட் நடத்திக்கொண்டிருக்கிறார்.
சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் கஞ்சா புழக்கம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொய் சொல்கிறார்.
* முழு பூசணி என்று சொல்ல மாட்டேன், முழு பாறாங்கல்லை சோற்றில் மறைக்கிறது தி.மு.க.
* இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாற்ற முடியும்?, தி.மு.க. அரசு தூக்கி எறியப்படும்.
* கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தபோது செல்லாத முதலமைச்சர் தேர்தல் நேரத்தின்போது செல்கிறார்.
* மக்கள் பிரச்சனைகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சர் போட்டோஷூட் நடத்திக்கொண்டிருக்கிறார்.
* திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.
Next Story






