என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அடுத்த வாரம் தமிழகம் வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்
    X

    அடுத்த வாரம் தமிழகம் வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்

    • தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
    • அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழகம் வருகிறார்.

    சட்டசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பிப்ரவரி 26, 27-ம் தேதிகளில் சென்னை வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அப்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×