என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - ஜி.கே. மணி
    X

    கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - ஜி.கே. மணி

    • காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் பல்கலைக்கழகம் உள்ள நிலையில் கலைஞர் பெயரில் இல்லை.
    • கலைஞர் மீது இருக்கும் மரியாதை அடிப்படையில் தான் அவர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கேட்கிறோம்.

    கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    அப்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது:

    * தமிழகத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் இல்லை.

    * காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் பல்கலைக்கழகம் உள்ள நிலையில் கலைஞர் பெயரில் இல்லை.

    * நேரு, இந்திரா காந்தி பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதேபோல் கலைஞர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் கூட இல்லை.

    * அரசியல் ரீதியாக தி.மு.க. - பா.ம.க. இடையே கருத்துவேறுபாடு இருந்தாலும் கலைஞர் பேரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கோருகிறோம்.

    * கலைஞர் மீது இருக்கும் மரியாதை அடிப்படையில் தான் அவர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கேட்கிறோம்.

    * கலைஞர் பெயரில் பல்கலை. அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×