என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இனி நாமதான், எப்போதுமே நாமதான்..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மதுரையில் தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.
- கடந்த 2 மாதங்களில் மட்டும் பல்வேறு மாநாடுகளை திமுக நடத்தி இருக்கிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளததை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஆளும் கட்சி யான தி.மு.க. மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு மாநாடுகள், தேர்தல் சந்திப்பு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
தி.மு.க. சார்பில் தொடர்ந்து தஞ்சையில் மகளிர் அணி மாநாடு, தாம்பரம், திருப்பத்தூரில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டங்கள், விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி மாநாடு என நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டங்களில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக மதுரையில் இன்று மாலை 5 மணிக்கு தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.
மாநாட்டிற்கு திறந்தவெளி வாகனத்தில் வருகை தந்த முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றியதாவது:-
வீரம் என்றால் மதுரை, பாசம் என்றால் மதுரை, கோவில் என்றால் மதுரை, சாப்பாடு என்றால் மதுரை, இங்கு எல்லாமே பேமஸ் தான் சித்திரைத்திருவிழா போல கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து உற்சாகம் அடைகிறேன், இனி நாமதான், எப்போதுமே நாமதான்!
கடந்த 2 மாதங்களில் மட்டும் பல்வேறு மாநாடுகளை திமுக நடத்தி இருக்கிறது. இந்த மாநாடுகள் எல்லாம் "வெறும் ட்ரெய்லர்தான்; மெயின் பிக்சர் திருச்சியில் இருக்கிறது".
அடுத்த 2 மாதங்களுக்கு நமக்கு ஓய்வே கிடையாது. "ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்!"
இவ்வாறு அவர் கூறினார்.






