ஈமு பண்ணை மேலாண் இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, 19 கோடி அபராதம்- நீதிமன்றம் உத்தரவு

1,087 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.19.03 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.2012ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஈமு பண்ணை மேலாண் இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, 19 கோடி அபராதம்- நீதிமன்றம் உத்தரவு
Published on

ஈரோடு சுசி ஈமு பார்ம்ஸ் மேலாண் இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ரூ.19.03 கோடி அபராதம் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு ஈமு கோழி பண்ணை தொடர்பான திட்டங்கள் விளம்பரப்படுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, கிளை அலுவலகம் பொள்ளாச்சியில் செயல்பட்ட நிலையில், 1,087 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.19.03 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதைதொடர்ந்து, 2012ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை முடிவில் ஈமு பார்ம்ஸ் இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.19.03 கோடி அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் சுசி ஈமு கோழி நிறுவனம் மீது 10 மோசடி வழக்குகள் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com