என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல் - விசாரணை கமிஷன் அமைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
- தி.மு.க. ஆட்சி மீதான புகார்கள் குறித்து முழு விசாரணை நடத்த வலியுறுத்தினோம்.
- இளைஞர் நலன் துறையில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது.
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* 2021 முதல் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலுடன் ஆளுநரை சந்தித்தோம்.
* கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் தொடர்பாக ஆவணங்களுடன் ஆளுநரிடம் முறையிட்டோம்.
* ஊழல் செய்வதை தவித தி.மு.க. தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.
* தி.மு.க. ஆட்சி மீதான புகார்கள் குறித்து முழு விசாரணை நடத்த வலியுறுத்தினோம்.
* துறைவாரியாக எவ்வளவு ஊழல் நடந்தது என்பதையும் ஆளுநரிடம் அளித்துள்ளோம்.
* தி.மு.க. அரசு எல்லா துறையிலும் ஊழல் செய்ததுடன் அதிகளவிலான கடன் சுமையில் தமிழ்நாட்டை தள்ளி உள்ளது.
* டாஸ்மாக் துறையில் ரூ.50000 கோடி ஊழல் நடந்துள்ளது.
* நகர்புற உள்ளாட்சி துறையில் 64,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது.
* இளைஞர் நலன் துறையில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது.
* கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.4.5 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.
* ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






