என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தும்கூட நிரந்தர டிஜிபியை நியமனம் செய்யாதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி
    X

    இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தும்கூட நிரந்தர டிஜிபியை நியமனம் செய்யாதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து கிடக்கிறது.
    • போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன.

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திண்டிவனத்தில் மாணவியை காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    * பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய காவலர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    * தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என எண்ணும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

    * போக்சோ வழக்குகளில் ரூ.104 கோடி நிவாரணம் அளித்திருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

    * சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது.

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து கிடக்கிறது.

    * காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு அச்சமில்லை என்பது தெரிய வருகிறது.

    * போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன.

    * தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

    * இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தும்கூட நிரந்தர டிஜிபியை நியமனம் செய்யாதது ஏன்?

    * தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. காலதாமதம் செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×