என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தும்கூட நிரந்தர டிஜிபியை நியமனம் செய்யாதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து கிடக்கிறது.
- போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திண்டிவனத்தில் மாணவியை காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
* பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய காவலர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
* தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என எண்ணும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
* போக்சோ வழக்குகளில் ரூ.104 கோடி நிவாரணம் அளித்திருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.
* சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து கிடக்கிறது.
* காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு அச்சமில்லை என்பது தெரிய வருகிறது.
* போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன.
* தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
* இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தும்கூட நிரந்தர டிஜிபியை நியமனம் செய்யாதது ஏன்?
* தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. காலதாமதம் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






