என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வின் கொத்தடிமையாக செயல்படுகிறார் அமைச்சர் ரகுபதி - இ.பி.எஸ். குற்றச்சாட்டு
- தமிழகத்தில் அரசும், காவல்துறையும் தூங்கிக்கொண்டிருக்கிறது.
- தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை, அவரவர் தான் அவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு.
சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நான் விழித்து கொண்டு சிறப்பாக செயல்படுவது அமைச்சர் ரகுபதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
* தி.மு.க.வின் கொத்தடிமையாக செயல்படுகிறார் அமைச்சர் ரகுபதி.
* ரகுபதியை அமைச்சராக்கி அழகு பார்த்தது அ.தி.மு.க.
* அமைச்சர் ரகுபதி கும்பகர்ண தூக்கத்தில் உள்ளார்.
* தமிழகத்தில் அரசும், காவல்துறையும் தூங்கிக்கொண்டிருக்கிறது.
* தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டு நாசமாகிவிட்டது.
* இருசக்கர வாகனத்தை தொலைத்துவிட்டு புகார் கொடுத்த பெண், போலீஸ் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
* காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் தொடர்பான வீடியோவை சுட்டிக்காட்டி புகார்.
* தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை, அவரவர் தான் அவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு.
* நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் என்ன என்றே தெரியாத முதலமைச்சர்.
* தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






