என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜன.24-ல் தி.மு.க. இளைஞரணி மாநாடு
- மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- 2-வது மண்டல மாநாடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலையொட்டி பல்வேறு அணிகளின் செயல்பாடுகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. இளைஞர் அணியில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறப்பினர்கள் உள்ளனர்.
இதில் உள்ள 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2-வது மாநாட்டை நடத்த தி.மு.க. இளைஞரணி முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கான தி.மு.க. இளைஞரணி மாநாடு ஜனவரி 24-ந்தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
2-வது மண்டல மாநாடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.






