என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வருகிற 19-ந்தேதி தஞ்சையில் தி.மு.க. மகளிரணி மாநாடு
- தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது.
- மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் வருகிற 19-ந்தேதி தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் தஞ்சையில் வருகிற 19-ந்தேதி மாலை 4 மணிக்கு தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெறுகிறது.
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
முன்னதாக, டிசம்பர் மாதம் 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' என்ற தலைப்பில் தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Next Story






