என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் திமுக எம்.பி. கனிமொழி
- தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- பிரதமர் மோடியை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அண்மையில் ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, தூத்துக்குடியில் உள்ள VOC துறைமுகத்தில் உள்ள போக்குவரத்து மையம் உட்பட எனது தொகுதி மற்றும் தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினேன். தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்துவதில் அளித்த ஆதரவிற்கும் நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Next Story






