என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு - முதலமைச்சர் ரங்கசாமி
    X

    புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு - முதலமைச்சர் ரங்கசாமி

    • புதுச்சேரியில் புதிதாக மது ஆலை தொடங்குவதற்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • புதிய மது ஆலை வந்தால் அரசுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும்.

    புதுச்சேரி சட்டசபையில் 2025-26-ம் நிதியாண்டிற்கு ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் பெண்கள், மாணவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

    இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபை இன்று காலை கூடியது. சட்டசபை உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது.

    புதுச்சேரியில் புதிதாக மது ஆலை தொடங்குவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:

    * புதிய மது ஆலை வந்தால் அரசுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும்.

    * புதிய மதுபான ஆலை மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    * புதுச்சேரியில் பூரண மதுவிலக்கை அனைவரும் ஆதரித்தால் நானும் தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×