என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
- ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை பிரசார திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
- தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தி.மு.க.வின் புதிய உறுப்பினர் சேர்க்கை பிரசாரத்தை தி.மு.க. தலைவரும் முதலமைச்சரும்ன மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 1-ந்தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.
தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கை பிரசார திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணி அளவில் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
Next Story






