என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இழிவான அரசியலை செய்கிறார்- கவர்னர் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
- கவர்னர் கம்பு சுத்த வேண்டியது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தான்.
- கவர்னர் தமிழகத்தில் நீடிப்பது தான் நமக்கு நல்லது.
தருமபுரி:
தருமபுரியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* இந்தியாவிற்கான திசைக்காட்டி திராவிட மாடல். ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறு பரப்புகின்றனர்.
* தமிழகத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் செய்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.
* தி.மு.க. அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ளாமல் பொய்களை மேடைதோறும் கவர்னர் புலம்பி வருகிறார்.
* கவர்னர் கம்பு சுத்த வேண்டியது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தான்.
* கவர்னர் தமிழகத்தில் நீடிப்பது தான் நமக்கு நல்லது.
* தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலம் என்பதை மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரமே கூறுகிறது.
* பள்ளிக்கல்வியில் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் 2-ம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டை கவர்னர் விமர்சிக்கிறார்.
* தமிழக மாணவர்களை இழிப்படுத்துகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி என்றார்.






