என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தவறான 'தீர்ப்பு' வழங்கியதை எதிர்த்து நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண் இது - மு.க.ஸ்டாலின்
- கடந்த கால அவல ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டது தி.மு.க. அரசு.
- 4.54 லட்சம் பேர் மதுரையில் மகளிர் உரிமை தொகை திட்டம் பெறுகின்றனர்.
ஊத்தங்குடி:
மதுரை மாவட்டம் ஊத்தங்குடியில் 63,698 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தவறான தீர்ப்பு வழங்கிய பாண்டிய மன்னனை எதிர்த்து நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண் மதுரை.
* திருச்செந்தூர் வேல் விவகாரத்தில் நீதி கேட்டு கலைஞர் நடை பயணத்தை தொடங்கிய மண் மதுரை.
* மதுரையை அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும் நிகழ்ச்சி இது.
* அரசு விழாவா? மாநாடா? என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடைபெறும் நிகழ்ச்சி இது.
* கடவுளின் பெயரை பயன்படுத்தி வெறுப்பை விதைப்பவர்களுக்கு பதிலடி அளிப்பவர் பிடிஆர்.
* கடந்த கால அவல ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டது தி.மு.க. அரசு.
* 4.54 லட்சம் பேர் மதுரையில் மகளிர் உரிமை தொகை திட்டம் பெறுகின்றனர்.
* புதுமை பெண் திட்டத்தில் 63,400 மதுரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
* மதுரை மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தில் 31,000 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்.
* மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 8.60 லட்சம் பேர் மதுரையில் பயன்பெற்றுள்ளனர்.
* நம்மை காக்க 48 திட்டத்தில் மதுரையில் மட்டும் 16 ஆயிரம் பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.
* நான் முதல்வன் திட்டத்தில் மட்டும் மதுரையை சேர்ந்த 1.17 லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
* முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் மூலம் 2 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
* மதுரையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகிறது.
* முதலமைச்சரின் முகவரி திட்டத்தில் 3.25 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
* என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கின்றனர்.
* எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அதனை தி.மு.க. அரசு முறியடிக்கும்.
* தி.மு.க. வளர்ச்சி அரசியலை முன்னெடுக்க, எதிர்க்கட்சிகள் வேறு எதோ அரசியலை முன்னெடுக்கின்றன.
* 10 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் இன்னும் மதுரைக்கு வரவில்லை.
* மதுரையில் நடந்த கீழடி அகழாய்வை நிறுத்த முயன்றது மத்திய பா.ஜ.க. அரசு.
* தமிழ்நாட்டிற்கு நிதியை கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது.
* மத்திய அரசு தமிழ் மீது வெறுப்புடன் நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.






