என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாநில சுயாட்சியை பாதுகாக்க நீதியரசர் தலைமையில் உயர்மட்ட குழு - முதலமைச்சர் அறிவிப்பு
- நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
- மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தேசியக் கல்வி கொள்கையை ஏற்காததால் ரூ.2,500 கோடியை மத்திய அரசு கொடுக்கவில்லை.
* கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாதது.
* மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மருத்துவ கல்வி கொள்கையை நீர்த்துப் போக செய்துவிட்டது.
* நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைந்துள்ளது.
* நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது தமிழக அரசுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
* மாநில அரசுகளின் தீவிர மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளது.
* மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்க முயற்சி நடைபெறுகிறது.
* கல்விக் கொள்கையில் தமிழக மாணவர்களின் நலனை மட்டுமே முதன்மையாக கொள்கிறது திராவிட மாடல் அரசு
* நாம் இயற்றிய சட்டமுன்வடிவுகள் மீது கவர்னர் காலம் தாழ்த்திய விவகாரத்தில் வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* மாநிலங்களின் நியாமான உரிமைகளை பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
* மாநில உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு உடனான உறவுகளை மேம்படுத்திட ஆய்வு செய்து உயர்மட்டக்குழு அறிக்கை அளிக்கும்.
* உயர்நிலைக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் வழங்கும் என்றார்.






