என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.வில் புதிய பொறுப்புகள் கிடைக்குமா? வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் - அண்ணாமலை
- சாமானிய மனிதனாக இருப்பதையே பவராக பார்க்கிறேன்.
- தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கக்கூடியவன்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம், தேசிய அளவில் புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் கூறுகையில்,
பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடம் உள்ளது.
ஆடு மாட்டோட இருக்கேன். விவசாயம் பார்க்குறேன். நேரம் கிடைச்சா கோவிலுக்கு போறேன். தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன்.
புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். சாமானிய மனிதனாக இருப்பதையே பவராக பார்க்கிறேன். எதுக்கு என்னை கூண்டுக்கிளியாக நினைக்கிறீர்கள்.
மக்கள் பணி இருக்கு. ஒரு தொண்டனாக நரேந்திர மோடிக்கு பணி செய்ய வேண்டும். என்னுடைய ஆசை பெரியது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கக்கூடியவன். அதற்கான காலம் வரும். அதுவரை தொண்டனாக பணி செய்துக்கொண்டிருப்பேன் என்றார்.






