என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க தன்மானம் உள்ள கட்சி- எடப்பாடி பழனிசாமி
    X

    அ.தி.மு.க தன்மானம் உள்ள கட்சி- எடப்பாடி பழனிசாமி

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.
    • முதலமைச்சரின் தனிநபர் விமர்சனத்திற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.

    ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச்செயாளர் இபிஎஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது, பரப்புரை வாகனத்தில் வருகை தந்த இபிஎஸ்-க்கு வழிநெடுகிலும் திரண்டு நின்ற மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பாஜகவின் களை கழக் அதிமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.

    காங்கிரசுக்கு திமுக கட்சி அடிமை. அதிமுக தன்மானம் உள்ள கட்சி.

    முதலமைச்சரின் தனிநபர் விமர்சனத்திற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.

    அதிமுக ஆட்சி காலத்தின் விவசாயம் செழித்து இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் குறைகள் என சுட்டிக்காட்ட முடியுமா?

    ஜெயலலிதாவின் மறைவுக்குபின் பல பிரச்சனைகளை அதிமுக சந்தித்தது. தொண்டர்களின் ஆதரவால கட்சியை காப்பாற்றினோம்.

    சட்டமன்றத்தில் நான் பெரும்பான்மையை நிரூபித்தபின் சட்டையை கிழித்துகொண்டு வீதியில் சென்றார் மு.க.ஸ்டாலின்.

    சட்டமன்றத்தில்நான் பெரும்பான்மை நிரூபித்ததை முதலமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியேடு சீர்கெட்டு விட்டது. தமிழ்நாட்டில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவலர்களுக் பாதுகாப்பு இல்லை.

    ஸ்டாலின் நாட்டு மக்களை பற்றி சிந்திக்க மாட்டார். அவரது வீட்டு மக்களை பற்றி மட்டும்தான் சிந்திப்பார்.

    நிர்வாக திறமையின்மை காரணமாக அரசு காலி பணியிட்கள் அப்படியே இருக்கிறது.

    திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, வரி உயர்வு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×