என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தத்தெடுக்க விஜய் முடிவு - ஆதவ் அர்ஜுனா
- பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி கேட்டபோது கலவரம் வரும் என போலீசார் கூறியதால் தான் கரூருக்கு மீண்டும் செல்லவில்லை.
- கரூரில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவாக அறிக்கை த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
* ஒரு வார காலம் விடுமுறை என்பதால் நீதித்துறையை நாட முடியாத சூழல் ஏற்பட்டது.
* நீதித்துறை, போலீஸ், ஊடகங்களை அணுக முடியவில்லை.
* பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி கேட்டபோது கலவரம் வரும் என போலீசார் கூறியதால் தான் கரூருக்கு மீண்டும் செல்லவில்லை.
* கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தத்தெடுக்க விஜய் முடிவு செய்துள்ளார்.
* கரூரில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவாக அறிக்கை த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






