என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆதவ் மீது நடவடிக்கை ஏன் ?- திருமாவளவன் விளக்கம்
- மத்திய அரசு வழக்கம்போல் தமிழக மக்களை வஞ்சித்துள்ளது.
- அரசியல் எதுவும் பேச வேண்டாம் என அவரிடம் முன்னரே தெரிவித்தேன்.
இன்றைக்கு கூடிய சட்டப் பேரவை கூட்டத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
முன்னதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம்சாட்டப்பட்ட விசிக துணை பொதுச் செயலாளலர் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பெஞ்சல் புயலால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நிவாரணம் வழங்காமல் மத்திய அரசு வழக்கம்போல் தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. புயல் நிவாரண நிதியாக நாங்கள் [விடுதலை சிறுத்தைகள்] ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அவருக்கு நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்தல் செய்தோம்.
பல முறை ஆதவ் அர்ஜுனாவுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. அவரின் அண்மை பேச்சு கட்சியின் நம்பகத்தன்மைக்கு ஊரு விளைவிக்கும் வகையில் இருந்தது. எனது அறிவுறுத்தலை மீறி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். அரசியல் எதுவும் பேச வேண்டாம் என அவரிடம் முன்னரே தெரிவித்தேன்.
ஆதவ்வின் பேச்சு என் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. திமுகவிடம் இருந்து எந்த அழுத்தமும் எனக்கில்லை. நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்ற எனது முடிவு சுதந்திரமானது. தவெகவுடனும் விஜய் உடனும் விசிகவுக்கு எந்த மோதலும் இல்லை என்று தெரிவித்தார்.






