search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மோதல் போக்கிற்கு தீர்வு காண வேண்டும்- முதல்வருக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம்
    X

    மோதல் போக்கிற்கு தீர்வு காண வேண்டும்- முதல்வருக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம்

    • அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.
    • இரு தரப்பு பிரதிநிதிகளை கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

    போக்குவரத்து கழக தொழிலாளர்கள், போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளது.

    அந்த கடிதத்தில், " இருதரப்பு அலுவலர்கள், தொழிலாளர் பிரதிநிதிகளை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

    தமிழகம் முழுவதும் காவல் துறையினர் திட்டமிட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.

    காவல் துறை முழுவதுமாக ஒன்றிணைந்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் விதி மீறல்களை தடுப்பதாக தொடங்கி இருப்பது நல்ல அறிகுறி அல்ல" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×