search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடம்பூர் மலைப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்
    X

    கடம்பூர் மலைப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்

    • உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக யானைகள் ரோட்டை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.
    • யானைகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அடர்ந்த வனப்பகுதிககுள் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக யானைகள் ரோட்டை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் சத்தி-கடம்பூர் ரோட்டில் நேற்று மாலையில் யானைகள் குட்டியுடன் கூட்டமாக ரோட்டை கடந்து சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் தெரிவித்ததாவது:-யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவைகள் ரோட்டை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொ ள்ள வேண்டும்.

    யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றை விரட்டவோ முயற்சி செய்யக்கூடாது. மேலும் செல்பி, புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் யானைகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×