என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நாங்குநேரி அருகே ரூ.1½ கோடி கொள்ளை- நகை வியாபாரியிடம் கைவரிசை காட்டிய 8 பேர் கும்பல்
- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
- கருப்பு நிற காரில் நாகர்கோவில் நோக்கி சென்ற கும்பல் நாங்குநேரி அருகே மீனவன்குளத்தில் இருந்து களக்காடு சென்றது தெரியவந்தது.
களக்காடு:
நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் நடத்தி வருகிறார்.
நேற்று காலையில் நகைகள் வாங்குவதற்காக சுஷாந்த் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் புறப்பட்டார்.
நெல்லை அருகே மூன்றடைப்பு ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது திடீரென 2 கார்களில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் சுஷாந்த் காரை வழிமறித்து கார் கண்ணாடியை இரும்பு கம்பியால் உடைத்தனர். சுஷாந்த் சுதாரிப்பதற்குள் அவர் மீது மிளகாய் பொடியை தூவினர்.
தொடர்ந்து காருடன் அவரை கடத்திச்சென்ற அந்த கும்பல் அவரை நடுவழியில் இறக்கி விட்டனர். பின்னர் நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு முன்பு உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராமத்தில் குளத்தின் கரையோரம் சுஷாந்தின் காரை நிறுத்திவிட்டு, அதில் வைத்திருந்த ரூ.1½ கோடி பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக சுஷாந்த் மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 395, 397 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் 8 பேர் கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தப்பிச்சென்ற முகமூடி கும்பலை பிடிக்க நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கருப்பு நிற காரில் நாகர்கோவில் நோக்கி சென்ற அந்த கும்பல் நாங்குநேரி அருகே மீனவன்குளத்தில் இருந்து களக்காடு சென்றது தெரியவந்தது. இதையடுத்து களக்காட்டிற்கு சென்று தனிப்படையினர் கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சேரன்மகாதேவி சாலையில் கார் சென்றது.
தொடர்ந்து ஆய்வு செய்ததில், கார் சேரன்மகாதேவி, அம்பை வழியாக தென்காசியை கடந்து கடையநல்லூர் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. மேற்கொண்டு அவர்கள் தப்பிச்சென்ற இடத்தை கண்டுபிடிக்க தனிப்படையினர் இன்று 2-வது நாளாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த கும்பல் அங்கிருந்து கேரளாவிற்கு தப்பிச்சென்று இருக்கலாமா? அல்லது கேரளா செல்வது போல் போலீசாரை திசைதிருப்பிவிட்டு ராஜபாளையம், மதுரை வழியாக வேறு எங்கும் அந்த கும்பல் தப்பிச்சென்றதா? என தனிப்படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்