search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜே.என்.1 தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை... அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    ஜே.என்.1 தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
    • இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும்.

    சென்னை :

    பருவமழையை ஒட்டி சென்னையில் 10வது வார சிறப்பு மருத்துவ முகாமை தரமணியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-

    * ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

    * தெற்காசிய நாடுகளில் ஜே.என்.1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

    * புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

    * ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

    * புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

    * இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும்.

    * 1.25 லட்சம் படுக்கை வசதியும், 2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×