என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம்... முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்
    X

    திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம்... முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்

    • திருச்சி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் எனும் மாபெரும் அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
    • திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின், இளைஞர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

    சென்னை:

    திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக சட்டப்பேரைவையில் 110 விதியின் கீழ் இன்று அறிவித்துள்ளார். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "திருச்சி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்" எனும் மாபெரும் அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.

    அறிவார்ந்த சமுதாயத்தின் அடையாளச் சின்னத்தை திருச்சியில் கட்டமைக்கும் முதலமைச்சருக்கு, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கு திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின், இளைஞர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

    Next Story
    ×