search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    8-ம் வகுப்பு மாணவியை கடத்தி குடும்பம் நடத்திய 3 குழந்தைகளின் தந்தை கைது
    X

    8-ம் வகுப்பு மாணவியை கடத்தி குடும்பம் நடத்திய 3 குழந்தைகளின் தந்தை கைது

    • கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    • மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தை ஒருவரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. எனவே போலீசாருக்கு அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சிறுமியை அந்த வாலிபர் கடத்தி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள்.

    அந்த வாலிபரின் செல்போன் எண்ணை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். செல்போன் டவர் உதவியுடன் சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அந்த நபரின் செல்போன் டவர் நாகப்பட்டினத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே கன்னியாகுமரி மகளிர் போலீசார் நாகப்பட்டினம் விரைந்து சென்றனர். அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வாடகை வீட்டில் சிறுமியுடன் 3 குழந்தைகளின் தந்தை குடும்பம் நடத்தியது தெரியவந்தது.

    போலீசார் அந்த வாலிபரை பிடித்ததுடன் சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியையும், அந்த வாலிபரையும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 8-ம் வகுப்பு மாணவியை 3 குழந்தைகளின் தந்தை கடத்தி சென்று குடும்பம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×