search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உரத் தொழிற்சாலையில் வாயு கசிவு- ரூ.6 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்
    X

    உரத் தொழிற்சாலையில் வாயு கசிவு- ரூ.6 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

    • வாயு கசிவை கண்டறிந்ததும் 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
    • தொழிற்சாலையை ஆய்வு செய்து உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டனர்.

    சென்னை:

    எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது குறித்து வேல்முருகன், ஜெகன் மூர்த்தி, எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்கள்.

    இதற்கு சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் தாக்கல் செய்த விவர அறிக்கையில் கூறி இருந்ததாவது:-

    இந்த உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் அங்கு குடியிருப்பு பகுதிகளில் வசித்த மக்களுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன.

    வாயு கசிவை கண்டறிந்ததும் 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலையை ஆய்வு செய்து உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டனர். அதன்படி உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    தற்போது விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூடம் 1986 பிரிவு 5-ன் கீழ் சுற்றுச்சூழல் இழப்பீடாக 5 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்து 888 ரூபாயை அந்த உர நிறுவனத்திடம் இருந்து ஏன் வசூலிக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×