search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையை சூழ்ந்த திடீர் புகை.. வெளியான எச்சரிக்கை.. என்ன தெரியுமா?
    X

    சென்னையை சூழ்ந்த திடீர் புகை.. வெளியான எச்சரிக்கை.. என்ன தெரியுமா?

    • தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிக்கப்படுகிறது.
    • மணலியில் காற்று மாசு அளவு 224 ஆக பதிவு.

    சென்னையில் இன்று (நவம்பர் 12) மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு 178 குறியீடாக பதிவாகி இருக்கிறது. நவம்பர் 10-ம் தேதி காற்று மாசு அளவு 83-ஆக இருந்த நிலையில், நேற்றைய காற்று மாசு அளவு 115 ஆகவும், இன்று 178 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் பட்டாசு வெடித்து வருவதால், காற்று மாசு அதிகரித்து இருக்கும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் தெரிவித்து உள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அளவு பதிவு செய்யப்பட்டதில், மணலியில் அதிகபட்சமாக காற்று மாசின் அளவு 224 ஆக பதிவாகி இருக்கிறது.

    இதே போன்று பெருங்குடியில் காற்று மாசு அளவு 221 ஆகவும், ஆலந்தூரில் 188 ஆகவும், வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 ஆகவும் பதிவாகி உள்ளது. சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் காற்று மாசு அளவு 170-க்கும் அதிகமாகவே பதிவாகி இருக்கிறது.

    Next Story
    ×