search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு வந்துள்ளது- அன்புமணி
    X

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு வந்துள்ளது- அன்புமணி

    • ஒரு சில கட்சித் தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
    • வருகிற அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

    தருமபுரி:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் நல்லானூரில் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-

    அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதாலும் இதர வேலைகள் இருப்பதால், கலந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஒரு நாளில் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லவுள்ளேன் என்றார்.

    திராவிட மாடல் ஆட்சி என்று சொல்பவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். ஏன் கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.


    பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 94 லட்சம் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அரசு ரூ.2 லட்சம் உதவி செய்வதாக அறிவித்து உள்ளார்கள்.

    இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ஒரு சில கட்சித் தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு இந்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த புரிதல் இல்லை.

    வருகிற அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×