search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சமூக நீதி பாதையில் திராவிட மாடல் ஆட்சி... மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    சமூக நீதி பாதையில் திராவிட மாடல் ஆட்சி... மு.க.ஸ்டாலின் பேச்சு

    • எல்லோரும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
    • கடந்த 3 ஆண்டுகளில் ரூ.175 கோடி மதிப்பில் 12 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

    சென்னை :

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.171 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் ரூ. 184 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இதன்பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * சமூக நீதி பாதையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    * சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நெறிமுறைகளின் படி தமிழ்நாட்டை உருவாக்க முயற்சி.

    * எல்லோரும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

    * அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    * ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    * ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலனுக்காக அயராது உழைப்பவர்களுக்கு விருதும், பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.

    * அம்பேத்கர் விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.

    * தாட்கோ மூலம் 10 ஆயிரம் பேருக்கு ரூ.152 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    * முதலீட்டு மானியம் வழங்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * கடந்த 3 ஆண்டுகளில் ரூ.175 கோடி மதிப்பில் 12 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

    * பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * சமூக வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×