என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
    • மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க வலியுறுத்தல்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை (19.12.2023) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×