search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கணேசமூர்த்தி எம்.பி. படத்திற்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    கணேசமூர்த்தி எம்.பி. படத்திற்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குமாரவலசில் உள்ள கணேசமூர்த்தி எம்.பி. தோட்டத்து வீட்டிற்கு சென்றார்.
    • கணேசமூர்த்தி எம்.பி. மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பி.ஆக இருந்த கணேசமூர்த்தி (77) கடந்த 24-ந்தேதி ஈரோடு பெரியார் நகர் வீட்டில் வைத்து சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 28-ந்தேதி கணேசமூர்த்தி எம்.பி. பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த குமாரவலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் எரியூட்டப்பட்டது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர மு.க.ஸ்டாலின் இன்று காலை குமாரவலசில் உள்ள கணேசமூர்த்தி எம்.பி. தோட்டத்து வீட்டிற்கு சென்றார். அங்கு கணேசமூர்த்தி எம்.பி. படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் கணேசமூர்த்தி எம்.பி. மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். சிறிது நேரம் அங்கிருந்த முதலமைச்சர் பின்னர் மீண்டும் தான் தங்கி இருக்கும் பயணியர் மாளிகைக்கு கிளம்பி சென்றார்.

    Next Story
    ×