என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'நீங்கள் நலமா?'- மக்களை தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- திட்டத்தை செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
- அரசின் திட்டங்கள் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்துரைக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
சென்னை:
தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வதற்கான 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை கடந்த 6-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் 'நீங்கள் நலமா?' திட்டத்தின் கீழ் வீடியோ கால் மூலம் மக்களை தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.
அப்போது, அம்பேத்கர் திட்டம் குறித்து பயனாளியிடமும், திட்டங்களின் செயல்பாடு குறித்து தொழில்முனைவோரிடமும் கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும் அரசின் திட்டங்கள் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்துரைக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
Next Story






