என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சேத்துப்பட்டு அருகே சாலை விபத்துகளில் 5 பேர் பலி
- இருவரும் எதிரே வந்த வேனில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு விழுப்புரம்-ஆரணி சாலையில் தத்தனூர் அருகே இரு சக்கர வாகனத்தில் செஞ்சி அடுத்த பெரியகரம் கிராமத்தை சேர்ந்த கணவன்-மனைவி குலதெய்வம் சாமி கும்பிட இரு சக்கர வாகனத்தில் வந்த போது கார் மோதி பலத்த காயமடைந்த நிலையில் சசிகுமார் அவருடைய மனைவி மகாலட்சுமி பலத்த காயமடைந்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சசிகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேத்துப்பட்டு ஆரணி சாலையில் மேல்வில்வராய நல்லூர் பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் ராஜபக்னேஸ்வரர் அவருடைய நண்பர் சென்னையில் பணிபுரியும் அரசு பேருந்து ஓட்டுனர் வெங்கடேசன் ஆகிய இருவரும் எதிரே வந்த வேனில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
நேற்று இரவு மருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்த துளசி என்பவர் தன்னுடைய பேத்தி திருமணத்திற்கு சேத்துப்பட்டு வந்து ஆரணி சாலையில் நடந்து பஜாருக்கு சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 10:30 மணி அளவில் ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த லாரியில் இடையங் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மரவியாபாரி பலராமன் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார் அடுத்தடுத்து 24 மணி நேரத்தில் 3 விபத்தில் 5 பேர் பலியானதில் சேத்துப்பட்டு போலீசார் செய்வதறியாது திணறி வருவது குறிப்பிடத்தக்கது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்