search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

    • தொகுதி பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரிடம் பேசியதாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
    • மண்டைக்காடு கலவரம் குறித்து வேணுகோபால் கமிஷன் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசியதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

    பா.ஜனதா எம்.எல். ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, காந்தி ஆகியோர் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து தொகுதி பிரச்சினையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

    அதன் பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    "மண்டைக்காடு கலவரம் குறித்து வேணுகோபால் கமிஷன் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசினோம். வேணு கோபால் கமிஷன் அறிக்கையை அரசாணையாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறும் போது, "தொகுதி பிரச்சினை குறித்து பேசினோம்" என்றார்.

    Next Story
    ×