search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலூரில் வருகிற 8-ந்தேதி பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகிறார்: ஏற்பாடுகள் தீவிரம்
    X

    வேலூரில் வருகிற 8-ந்தேதி பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகிறார்: ஏற்பாடுகள் தீவிரம்

    • பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. முழு வேகத்தில் தயாராகி வருகிறது.
    • அமித் ஷா வேலூருக்கு வருகை தர இருப்பது மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. முழு வேகத்தில் தயாராகி வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    அதன்படி வேலூரில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை)நடைபெறுகிறது.

    இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார். இதுகுறித்து பா.ஜ.க. மேலிடத்தில் இருந்து கட்சி நிர்வாகிகளுக்கு அவசர தகவல் நேற்று பகிரப்பட்டது.

    அமித் ஷா வேலூருக்கு வருகை தர இருப்பது மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கார்த்தி காயினி துணைத்தலைவர் நரேந்திரன். மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நடந்தது.

    கூட்டத்தில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி வேலூரில் வரும் 8-ந்தேதி பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.

    இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார். அதற்கு ஏற்றவாறு களப்பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.

    Next Story
    ×