search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தலைவர்களின் உயிரை பறித்த டிசம்பர்...
    X

    தலைவர்களின் உயிரை பறித்த டிசம்பர்...

    • ஜெயலலிதா சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்து இரண்டிலும் வெற்றி கண்டவர்.
    • சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்து மிகக்குறைந்த நாட்களிலேயே எதிர்க்கட்சி தலைவராகியவர் விஜயகாந்த்.

    டிசம்பர் திக்.... திக்... திக்...

    தமிழகத்தில் டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே ஒன்று இயற்கை பேரழிவு, மற்றொன்று தலைவர்கள் மரணம் என்பது தொடர் கதையாகி வருவது இன்றளவும் தொடரத்தான் செய்கிறது. அந்த வகையில்தான் இன்று கேப்டன் விஜயகாந்த்தும் மறைந்துள்ளார்.

    தமிழக மக்களால் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் எம்.ஜி.ஆர். சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் தடம் பதித்து இரண்டிலும் உச்சத்திற்கு வந்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். இவர் டிசம்பர் 24-ந்தேதி காலமானார்.

    அதேபோல் புரட்சித்தலைவி ஜெயலலிதா சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்து இரண்டிலும் வெற்றி கண்டவர். அரசியலில் அவர் காட்டிய அதிரடிகள் ஏராளம். துணிச்சலின் அடையாளமாக கருதப்பட்ட அவரும் டிசம்பர் மாதம் 5-ந்தேதி காலமானார்.

    தே.மு.தி.க. நிறுவனரும் புரட்சிக்கலைஞர் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டவருமான விஜயகாந்த் ஆக்ஷன் சண்டை காட்சிகளிலும், நெருப்பு பொறி பறக்க இவர் பேசும் வசனங்களும் மிகவும் பிரபலமானவை. அந்த வகையில் சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்து மிகக் குறைந்த நாட்களிலேயே எதிர்க்கட்சி தலைவராகியவர்.

    கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி 29 எம்.எல்.ஏ.க்களை பெற்று எதிர்க்கட்சி தலைவரானவர். பல்வேறு சிறப்பு பண்புகள் பெற்ற விஜயகாந்த் டிசம்பரில் காலமாகியுள்ளார். முன்னதாக சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார், பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் டிசம்பர் மாதம் காலமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×