search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொய் செய்தியை பரப்புவது வருத்தத்துக்குரியது- நிர்மலா சீதாராமனுக்கு சேகர் பாபு கண்டனம்
    X

    பொய் செய்தியை பரப்புவது வருத்தத்துக்குரியது- நிர்மலா சீதாராமனுக்கு சேகர் பாபு கண்டனம்

    • பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி தமிழக அரசை நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்தார்.
    • பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலைத்துறை விதிக்கவில்லை என சேகர் பாபு விளக்கம்.

    இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலைத்துறை விதிக்கவில்லை.

    முற்றிலும் உண்மைக்கு புறம்பான உள்நோக்கம் கொண்ட பொய் செய்தியை உயர்ந்த பதவியில் உள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி "அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோவில் நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை.

    தனியாருக்கு சொந்தமான கோவில்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்களை மிரட்டி வருகின்றனர். தமிழக அரசின் இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

    Next Story
    ×