search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்ட நெரிசலை குறைக்க 25-ந்தேதி எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு பகல் நேர சிறப்பு ரெயில்
    X

    கூட்ட நெரிசலை குறைக்க 25-ந்தேதி எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு பகல் நேர சிறப்பு ரெயில்

    • சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் காரைக்குடிக்கு நாளை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
    • நாகர்கோவிலில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் 24-ந்தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது.

    சென்னை:

    ஆயுத பூஜை கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்கள் அறிவித்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் எண்.06039 காரைக்குடிக்கு நாளை (22-ந்தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 9 மணிக்கு சென்றடைகிறது.

    இதேபோல் எண். 06040 காரைக்குடியில் இருந்து 23-ந்தேதி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் எண்.06046 24-ந்தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது. எழும்பூரில் இருந்து எண்.06045 சிறப்பு ரெயில் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

    இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரெயிலில் ஏசி 2-ம் வகுப்பு படுக்கை வசதி ஒரு பெட்டி, 3-ம் வகுப்பு ஏசி படுக்கை பெட்டிகள் 5, சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்-11, 2 பொதுப்பெட்டிகள் இடம்பெற்று உள்ளன.

    சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    Next Story
    ×